மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு.! - Seithipunal
Seithipunal


டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும் படி கெஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு கடந்த மாதம் 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவால் மீதான சட்ட நடவடிக்கை தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. 

இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் சிறையில் இருந்தவாறு இன்று காணொளி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது, அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை விசாரணை நடத்த அவரது நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

இந்த கோரிக்கையை ஏற்ற டெல்லி நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arvind kejriwal Court Custody Extension


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->