இந்திய ஏவுகணை நாயகன் டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் நினைவு தினம் இன்று.!!
APJ Abdul Kalam Memorial 2022
டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 7வது ஆண்டு நினைவு தினம் இன்று. இந்திய ஏவுகணை நாயகன் டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ராமேஸ்வரத்தில் பிறந்தார். வாழ்நாள் முழுவதும் மாணவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக விளங்கிய இவரின் பிறந்த நாளை ஐ.நா. சபை 2010ல் உலக மாணவர்கள் தினமாக அறிவித்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கூடத்தில் தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த இவர் 1980ஆம் ஆண்டு SLV-III ராக்கெட்டை பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார்
இவர் பத்ம பூஷண் (1981), பத்ம விபூஷண் (1990), பாரத ரத்னா (1997) போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இவருடைய அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள் ஆகிய புத்தகங்கள் புகழ் பெற்றவைகள்.
இவர் 1999ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். 2002ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக 2007ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் 27.7.2015ஆம் ஆண்டு மறைந்தார்.
English Summary
APJ Abdul Kalam Memorial 2022