ஏடிஎம்மில் கொள்ளையடிக்கச் சென்ற 7 வயது சிறுவன் மற்றும் மர்ம கும்பல்.! பின் நடந்த வேடிக்கை.!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் 7 வயது சிறுவனை வைத்துக்கொண்டு ஒரு கும்பல் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலத்தில் உள்ள என்டிஆர் மாவட்டத்தில் திருவூர் பகுதியில், கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் இருக்கும் பணத்தை கொள்ளையடித்துச் செல்ல சில மர்ம நபர்கள் வந்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் ஏழு வயது சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இயந்திரத்தை உடைக்க முயற்சித்த போது அதன் மோடியை மட்டும் தான் உடைக்க முடிந்தது. எனவே லாக்கரில் இருக்கும் பணத்தை எடுக்க முடியாமல் இந்த திருட்டு முயற்சி தோல்வியில் முடிந்தது. 

இது குறித்து போலீசாருக்கு தகவல் சென்ற நிலையில் அவர்கள் விரைந்து வந்து ஏடிஎம் மையத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anthra Thiruvur ATM theft attempt 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->