'ட்ரெஸ்ஸே இல்லாம குளிக்கலாமா?' 50 வயது பெண்ணிடன் அத்துமீறிய அரசு அதிகாரிக்கு அடி, உதை.!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் பகுதியில் பதான் கான் என்ற வட்டார வளர்ச்சி அலுவலருக்கு 50 வயதாகும் நிலையில், அலுவலகத்தில் பணி செய்த 30 வயது பெண்ணை நிர்வாணமாக குளிக்க அழைத்த காரணத்தால் பெண்ணின் உறவினர்கள் அவரை அடித்து மிதித்துள்ளனர்.

வேலை செய்து வந்த இடத்தில் அந்த பெண்ணை நிர்வாணமாக குளிக்கலாம் என்று அழைத்துள்ளார். அந்த பெண் மறுத்தபோது விடாமல் தொடர்ந்து செல்போனில் மெசேஜ் அனுப்பி டார்ச்சர் செய்துள்ளார்  ஒரு கட்டத்தில் இதை அந்த பெண்ணால் பொறுத்துக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

இதனால் விஷயம் உறவினர்களுக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் அனைவரும் அலுவலகத்திற்குள் குவிந்து சம்பந்தப்பட்ட அதிகாரியை  அடித்து உதைத்து கடுமையாக தாக்கினர். அலுவலகத்தில் இருந்த பொருள்களை சூறையாடியுள்ளனர். இதனால், பதறிப்போன பதான்கான் மன்னித்து விடுங்கள் தெரியாமல் செய்துவிட்டேன் என்று கேட்டுள்ளார்  அந்தப் பெண்ணின் உறவினர்களிடம் காலில் விழுந்துள்ளார்.

இதனை தொடர்ந்து போலீசார் விஷயம் கேள்விப்பட்டு வந்து கைது செய்து அழைத்துச் சென்றனர். பாதுகாவலராக இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள் இப்படி மோசமான செயல்களில் ஈடுபடுவது வருத்தமளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Antha Govt officer Sexually harassed women


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->