வகுப்பறைகளில் செல்போன் பயன்படுத்தக் கூடாது - மாநில அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


வகுப்பறைகளில் செல்போன் பயன்படுத்தக் கூடாது - மாநில அரசு அதிரடி உத்தரவு.!

ஆந்திரா மாநிலத்தில் பள்ளி வகுப்பறைகளில் செல்போன்கள் பயன்படுத்த மாநில அரசு தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக நேற்று புதிய உத்தரவு ஒன்றை அரசு வெளியிட்டது.

அந்த உத்தரவில், "மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்கு செல்போன்களை எடுத்து செல்லலாம், ஆனால், அவற்றை வகுப்பறைகளில் பயன்படுத்தக்கூடாது. 

வகுப்பறைக்கு செல்வதற்கு முன்பு ஆசிரியர்கள் தங்கள் செல்போன்களை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும், இந்த நடவடிக்கை யுனெஸ்கோ அமைப்பின் அறிவுறுத்தலின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஆசிரியர் சங்கங்களிடம் ஏற்கனவே ஆலோசனை நடத்தப்பட்டு இருப்பதாகவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andira government ban cellphone at school classroom


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->