அரசு பள்ளியில் கொடுமை: 10 ஆம் வகுப்பு மாணவி 9 மாத கர்ப்பம்! சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்! - Seithipunal
Seithipunal


ஆந்திரா, கதிரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். 

இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு தண்ணீர் குடிப்பதற்காக சென்றபோது அங்கிருந்த ஆசிரியர் ரெட்டி நாகையா என்பவர் மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு இது தொடர்பாக யாரிடமும் தெரிவிக்க கூடாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

பயந்து போன மாணவி இது தொடர்பாக வெளியில் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆசிரியர் தொடர்ந்து மாணவியை பலமுறை மிரட்டி வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். 

 

இதனால் மாணவி கர்ப்பமானார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மாணவிக்கு கடந்த 14ஆம் தேதி கடுமையான வயிறு வலி ஏற்பட்டு அவரது பெற்றோர் மாணவியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். 

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். 

பின்னர் மாணவிக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது மாணவிக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மாணவியின் மேல் சிகிச்சைக்காக அனந்தபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். 

இது தொடர்பாக மருத்துவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் மாணவி, தன்னை ஆசிரியர் ரெட்டி நாகையா பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதனை அடுத்து போலீசார் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra government school student 9 months pregnant


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->