இறந்த மகனின் உடலை 40 கி.மீ. இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற தந்தை: பின்னணியில் அதிர்ச்சி!
Andhra father to carry dead son on motorcycle 40 km
ஆந்திரா, அமரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கப்பா. இவர் விவசாயி. இவரது மகன் ருஷி. இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிறுவனுக்கு நேற்று அதிகாலை திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த லிங்கப்பா உடனடியாக 108 அவசர ஊர்தியை தொடர்பு கொண்டு அதன் மூலம் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து லிங்கப்பா சிறுவனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல உதவுமாறு அவசர ஊர்தி ஊழியர்களிடம் கேட்டுள்ளார்.
ஆனால் ஊழியர்கள் இறந்தவர்களின் உடலை அவசர ஊர்தி மூலம் கொண்டு செல்ல அனுமதி இல்லை என தெரிவித்ததால் லிங்கப்பா அழுது கொண்டே அவரது உறவினர் ஒருவரை வரவழைத்து இரு சக்கர வாகனத்தில் இறந்த சிறுவனின் உடலை பின்னால் அமர்த்தி சுமார் 40 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமரபுரம் மண்டல வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Andhra father to carry dead son on motorcycle 40 km