கள்ளக்காதல் விவகாரம்: தட்டி கேட்ட தந்தைக்கு எமனாக மாறிய மகன்!  - Seithipunal
Seithipunal


ஆந்திரா, ஏலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசராவ் (வயது 47) இவரது மகன் நாகதேஜா. சீனிவாச ராவுக்கு சொந்தமாக உள்ள 4 ஏக்கர் நிலத்தில் மகனுடன் விவசாயம் செய்து வந்தார். 

அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் நாகதேஜாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சீனிவாச ராவ் அவரது மகனிடம் கள்ளத்தொடர்பை கைவிடும் பாடி அறிவுரை தெரிவித்துள்ளார். 

ஆனால் தந்தையின் அறிவுரையை ஏற்காமல் நாகதேஜா கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்ததால் அடிக்கடி தந்தை, மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த நாக தேஜா கள்ள தொடர்புக்கு இடையூறாக இருக்கும் தந்தையை கொலை செய்ய முடிவு செய்தார். 

அதன்படி நேற்று முன்தினம் இரவு மீண்டும் தந்தை மகனிடையே தகராறு ஏற்பட்டதில் நாகதேஜா அருகில் இருந்த செங்கல்லை எடுத்து தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். 

இதில் பலத்த காயமடைந்த சீனிவாச ராவ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். தந்தை இறந்ததை அறிந்த நாகதேஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீனிவாச ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்து நிலையத்தில் மறைந்திருந்த நாக தேஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra father murder case son arrested


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->