தப்பு செய்தவர்களுக்கு மன்னிப்பு கிடையாது... மும்பை ஆட்சி மாற்றத்தில் பஞ்சாயத்து செய்த அஜித்பவார் சரவெடி பேச்சு..! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபையில் நேற்று பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சர் அஜித் பவார் பேசியிருந்தார். 

இது தொடர்பாக பேசிய சமயத்தில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மந்திரி சுதீர் சிவசேனாவை புறந்தள்ளி தவறு இழைத்தோம் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, தவறு செய்பவர்களுக்கு மன்னிப்பு என்பது கிடையாது என்று தெரிவித்துள்ளார். 

இதனை கவனித்த உத்தவ் தாக்கரே சிரித்தது பெரும் அதிர்ச்சியை அஜித் பவாருக்கு ஏற்படுத்தினாலும், செய்வதறியாது தனது பேச்சினை தொடர்ந்தார். மேலும், ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்றவர்கள் மகா விகாஸ் அகாடியின் கூட்டணியில் இல்லை என்றும், பாஜக சட்டசபையில் இல்லாத எம்.எல்.ஏக்களை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த விசயத்திற்கு பதில் அளித்த சுதீர், சிவசேனாவை பாஜக புறம்தள்ளியதாக நான் வேடிக்கையுடன் கூறினேன். இது அஜித்பவாருக்கு நன்றாக பொருந்தியதை, அவர் பயன்படுத்திக்கொண்டுள்ளார். இதனைப்போல கரோனா வைரஸில் இருந்தும் எம்.எல்.ஏக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அஜித்பவார் கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ajith pawar speech about bjp shivsena


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->