பெற்றோர்களே உஷார்.. அடினோ வைரஸ் பாதிப்பு.. 5 குழந்தைகள் பலி.! - Seithipunal
Seithipunal


கொல்கத்தாவில் கடந்த 24 மணி நேரத்தில் மூச்சுத்திணறல் காரணமாக 5 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் சமீப சில நாட்களாக அடினோ வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள 2 அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 குழந்தைகள் நுரையீரல் தொற்றால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது.

ஆனால், குழந்தைகள் உயிரிழந்ததற்கான காரணம் அடினோ வைரஸ் தான் என்று உறுதியாக கூற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த 5 குழந்தைகளுக்கும் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சியால் இறக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இதில், உயிரிழந்த 5 குழந்தைகளில் 9 மாத குழந்தையும் அடங்கும். அந்த குழந்தையின் சோதனை அறிக்கையை பொறுத்தே அடினோ வைரஸால் இறந்ததா என தெரியவரும் என அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adenovirus spread in Kolkata 5 babys death


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->