பெற்றோர்களே உஷார்.. அடினோ வைரஸ் பாதிப்பு.. 5 குழந்தைகள் பலி.!
Adenovirus spread in Kolkata 5 babys death
கொல்கத்தாவில் கடந்த 24 மணி நேரத்தில் மூச்சுத்திணறல் காரணமாக 5 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் சமீப சில நாட்களாக அடினோ வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள 2 அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 குழந்தைகள் நுரையீரல் தொற்றால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது.
ஆனால், குழந்தைகள் உயிரிழந்ததற்கான காரணம் அடினோ வைரஸ் தான் என்று உறுதியாக கூற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த 5 குழந்தைகளுக்கும் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சியால் இறக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதில், உயிரிழந்த 5 குழந்தைகளில் 9 மாத குழந்தையும் அடங்கும். அந்த குழந்தையின் சோதனை அறிக்கையை பொறுத்தே அடினோ வைரஸால் இறந்ததா என தெரியவரும் என அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Adenovirus spread in Kolkata 5 babys death