நகைகளை திருடிய நடிகை..! விசாரணையில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா காவல்துறையினர் 25 வயதுடைய நடிகை ஒருவரை நகைகளை திருடிய குற்றத்திற்காக கைது செய்து இருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே அருகே இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் சினேலதா வசந்த் பாட்டில் என்ற பெண் வசித்து வருகின்றார்.

இவர் தான் வாழும் வீட்டில் 50 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிய காரணத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருக்கின்றார் 

அப்போது அந்த பெண் நகைகளை திருடியது உண்மை தான் என்று திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்டார். அப்பொழுது அவர் தான் ஒரு நடிகை என்று காவல்துறையிடம் தெரிவித்ததாக காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பின்னர், லஷ்கர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஒரு நடிகை எதற்காக நகைகளை திருட வேண்டும்.? இதுதான் முதல் தடவை செய்த குற்றமா அல்லது அவர் இதற்கு முன்பாக ஏதேனும் குற்றம் புரிந்து இருக்கிறாரா என்ற கோணத்தில் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress theft in maharashtra


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->