சடலத்துடன் இளைஞர் செய்த மோசமான காரியம்.! வீடியோ வெளியிட்ட கொடூரம்.!  - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் அலி மற்றும் ஜலாலுதீன் இருவரும் இறைச்சி கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளனர். இருவருக்குமிடையே செல்போன் குறித்த வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கின்றது. இதில் ஆத்திரமடைந்த அப்துல் கடையில் இருந்த கத்தியை எடுத்து ஜலாலுதீன் மீது கொடூரமாக வெட்டிக்கொலை செய்து இருக்கின்றார்.

அதன் பின்னர் அந்த சடலத்துடன் பின்னணி இசை ஒலிக்க வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கின்றார். மேலும், இந்த வீடியோவை தன்னுடைய நண்பர்களுக்கும் அவர் பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றார்.

இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து போது அப்துல் அலி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். அப்பொழுது அவரை போலீசார் மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதி பெறுகின்றனர். தற்போது நலமாக இருக்கிறார். இருப்பினும், அவர் முழுமையாக குணம் அடைந்த பின்னர்தான் காவல்துறையினரால் கைது செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.

இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட ஜலாலுதீன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவருடைய ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A young boy did video with dead body in Assam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->