8 ஆம் தேதி திருப்பதி பக்தர்களின் தரிசனத்திற்கு திறப்பு..!!
8 th June Tirupathi temple open
திருப்பதியில் வரும் 8 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிப்பதாக ஆந்திர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், திருப்பதியில் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. தனிநபர் இடைவெளியாக ஆறு அடி இடைவெளி விட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதில் முதற்கட்டமாக தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படிப்படியாக பிற மாவட்ட நபர்களுக்கும், பிற மாநில நபர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பல நாட்களாக பக்தர்களின் தரிசனத்திற்கு திருப்பதியில் அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
8 th June Tirupathi temple open