தனியார் விடுதியில் உணவருந்திய 76 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி! நடந்தது என்ன?
76 students dined private hotel admitted hospital
உத்திர பிரதேசம், நொய்டாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் உணவு சாப்பிட்ட 76 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நொய்டாவில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு வழக்கம் போல அங்கு உள்ள மாணவர்களுக்கு சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மாதிரிகளை சேகரிக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு விரதம் இருந்து வந்ததாகவும் பிறகு அவர்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவு சாப்பிட்டதால் உடல் உபாதை ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
English Summary
76 students dined private hotel admitted hospital