ரயிலில் கடத்திய ரூ.76 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.! வாலிபர் கைது.!
76 lakh worth of gold seized in Kasaragod railway station
காசர்கோட்டில் ரயிலில் தங்கம் கடத்திய வாலிபரை கைது செய்த அதிகாரிகள், ரூபாய் 76 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட சுங்க இலாகா சூப்பிரண்டுக்கு நாகர்கோவில்-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வாலிபர் ஒருவர் தங்கம் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சுங்க அதிகாரிகள், காசர்கோடு ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் வாலிபர் ஒருவர் பிரட் மேக்கரில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் செங்கழா பகுதியை சேர்ந்த முகமது பாயிஸ் (33) என்பதும், அவர் துபாயில் இருந்து விமானத்தின் மூலம் தங்கம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவரிடமிருந்து ரூபாய் 76 லட்சம் மதிப்பிலான 1.3 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் முகமது பாயிசை கைது செய்தனர். மேலும் தங்கம் கடத்தல் தொடர்பாக அவரிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
76 lakh worth of gold seized in Kasaragod railway station