அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் கடந்த 2 நாட்களில் 7 முறை நிலநடுக்கம்.. பொதுமக்கள் அச்சம்.! - Seithipunal
Seithipunal


அந்தமான் நிக்கோபார் தீவில் கடந்த 2 நாட்களில் 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

அந்தமான் நிக்கோபார் தீவுகளில்  நேற்று முன்தினம் மதியம் 1.19 மணியளவில் 4.9 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டாவது முறையாக மதியம் 2.59 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. 

இந்த நிலநடுக்கமானது நிக்கோபார் தீவில் 140 கிலோமீட்டர் தொலைவிலும், 10 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மாலை 4.01 மணியளவில் மூன்றாவது முறையாக அந்தமான் நிக்கோபார் தீவின் கடல் பகுதியில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

 இதையடுத்து 5.5 மற்றும் 3.9 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை 2.26 மணியளவில் 4.6 ரிக்டர் அளவில் 6வது முறையாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்றிரவு 10.41 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் தொடர்ந்து 7வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 7வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 earthquake last 2 days in Andaman Islands


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->