6 வயது சிறுமி விபத்தில் பலி.. ஒட்டுநருடன் வாகனத்திற்கு தீவைத்த பொதுமக்கள்..!
6 years old girl death in Accident
6 வயது சிறுமி விபத்தில் பலியானதால் வாகனத்திற்கு தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், சிராசிங் பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுமி ஒருவர் பல பயன்பாடு வாகனம் ஒன்று மோதியதில் பரிதாபகாம உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதன்னைக்காக அனுப்பி வைத்தனர்.
சிறுமி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் அந்த வானத்தை சிறைபிடித்து அடித்து நொறுக்கி தீவைத்தனர். மேலும், அந்த வாகனத்தின் ஒட்டுநரை அடித்து அந்த தீயில் தள்ளினர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஓட்டுநரை மீட்டனர்.
மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
6 years old girl death in Accident