ராமர் கோவிலுக்கு புனித பயணம் மேற்கொண்ட பக்தர்கள் மீது லாரி மோதி விபத்து.. 6 பேர் பலி.!
6 devotees death in anthra
ஆந்திர மாநிலத்தில் புனித மீது லாரி மோதிய விபத்தில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்து உள்ளனர்.
ஆந்திர பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் இருந்து சிந்தூர் மண்டலத்தின் பொட்டுகுடெம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மினிவேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த மினிவேனில் பக்தர்கள் பயணம் செய்து கொண்டிருந்து உள்ளனர்.
இந்த நிலையில், எதிரே பத்ராசலம் நோக்கி வந்த லாரி ஒன்றின் மீது மினிவேன் மோதி கொடூர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உடல் நசுங்கி பக்தர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்த நபர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் சத்தீஷ்காரை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
English Summary
6 devotees death in anthra