8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - 54 வயது டியூஷன் நிர்வாகி கைது - Seithipunal
Seithipunal


8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 54 வயது டியூஷன் நிர்வாகியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

புதுச்சேரி மாநிலத்தை மாகி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (54). இவர் வீட்டிலும், கேரள மாநிலத்தில் உள்ள தலச்சேரி பகுதியில் டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். இவரது டியூஷன் சென்டரில் அதே பகுதியை சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர் படித்து வந்தார். இந்நிலையில் அந்த மாணவிக்கு ராதாகிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமி இது குறித்து தாயிடம் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து குழந்தைகள் நல குழுவிடம் புகார் அளித்தார். இதையடுத்து, இதுதொடர்பாக சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், ராதாகிருஷ்ணன் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மாகி காவல்துறையினர், போகோ சட்டத்தின் கீழ் ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

54 year old tuition administrator was arrested for sexually harassing a class 8 girl


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->