மொபைலில் கேம் விளையாடிய மகன்.. ஆத்திரத்தில் தந்தை செய்த செயல்...! - Seithipunal
Seithipunal


செல்போனில் விளையாடி கொண்டிருந்த தந்தை தாக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி கான்பூர் பகுதியை சேர்ந்த ஆதித்ய பாண்டே அந்த பகுதியில் பால்வியாபாரியாக இருகிறார். இவருக்கு திருமணமாகி உத்கர்ஷ் (5) என்ற மகன் இருக்கிறான். உத்கர்ஷ் படிக்காமல் தனது மொபைலில் கேம் விளையாடி கொண்டிருந்தார்.

தந்தை பலமுறை கண்டித்தும் கேட்காமல் கேம் விளையாடுவதை தொடர்ந்து வந்துள்ளார். சம்பவதன்று, தனது மகன் கேம் விளையாடுவதை கண்ட ஆதித்ய பாண்டே ஆத்திரத்தில் மகனை அடித்துள்ளார்.

இதில், சிறுவன் மயக்கமடையவே பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்து விட்டதாக கூறினர்.

சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததை கண்டு சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து, ஆதித்ய பாண்டே கைது செய்த காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்குபதிவு செய்தர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 Year Old Boy beaten death in Delhi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->