ஆந்திரா : எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்த - 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்து உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள மஞ்சரியாலா மாவட்டம், வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த சிவய்யா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென நள்ளிரவு சுமார் 1 மணியளவில் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயானது வீடு முழுவதும் பரவியதால், வீட்டில் இருந்த 5 பேரும் தப்பிச் செல்ல முடியாமால் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், தீயில் கருகி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் பலியானவர்கள் சிவய்யா(50), அவரது மனைவி பத்மா (45), இவர்களது மகள் மோனிகா (23) மற்றும் மோனிகாவின் 2 பெண் குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 killed in gas cylinder explosion in Andhra


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->