வங்கதேசத்தில் 4.8 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம் - அசாமிலும் நில அதிர்வு
4 point 8 magnitude earthquake jolts Bangladesh
கடந்த ஜூன் 13ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அரியானா, பஞ்சாப், டெல்லி, உத்திர பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் உணரப்பட்டது.
இந்நிலையில், வங்கதேசத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10.16 மணி அளவில் 70 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் அசாமின் கவுகாத்தி மற்றும் வடகிழக்கு மாநிலத்தின் பிற பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. மேலும் ரிக்டர் அளவுகோலில் 4.8ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அச்சமடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு முன்பாக கடந்த ஜூன் 11 அன்று அசாமின் மத்தியப் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பிரம்மபுத்திரா ஆற்றின் வடக்குக் கரையில் உள்ள சோனிட்பூர் மாவட்டத்தில் காலை 11:35 மணி அளவில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
4 point 8 magnitude earthquake jolts Bangladesh