குஜராத்தில் 2 பகுதிகளில் நிலநடுக்கம்.! ரிக்டர் அளவில் 4.2 மற்றும் 3.2ஆக பதிவு.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் (திங்கள்கிழமை)இன்று காலை 6.38 மணியளவில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது கட்ச் மாவட்டத்தின் துதாய் கிராமத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் வட-வடக்கு கிழக்கே மையம் கொண்டிருந்தது.

இதற்கு முன்பாக, காலை 5.18 மணியளவில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது மாவட்டத்தின் கவ்டா கிராமத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 23 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 point 2 magnitude earthquake jolts Kutch Gujarat


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->