பஞ்சாப் : கனமழை எதிரொலி.. ஜூலை 13-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
3days school holiday in Punjab due to heavy rain
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக இமாச்சலப் பிரதேசம் பஞ்சாப் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.
இதில் டெல்லியில் ஒரே நாளில் 153 மி.மீ மழை பதிவாகியது குறிப்பிடத்தக்கது. மேலும் இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக மிக கனமழை பெய்து வரும் நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. மேலும் இன்னும் சில நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி ஜூலை 13ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
3days school holiday in Punjab due to heavy rain