சாலையில் தாறுமாறாக ஓடிய பேருந்து - பயணிகளின் கதி என்ன?
33 pasangers injured for bus accident in madhya pradhesh
மத்திய பிரதேசம் மாநிலத்தின் மாண்ட்சார் நகரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கார் நோக்கி பேருந்து ஒன்று 33 பயணிகளுடன் நேற்றிரவு சென்று கொண்டிருந்தது.
இதையடுத்து அந்த பேருந்து ஹதுனியா கிராமம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் அலறினர்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருந்தவர்களை வெளியே கொண்டு வந்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஹதுனியா போலீசார், விபத்து நடந்த பகுதிக்கு சென்று காயமடைந்த பயணிகளை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து கவிழ்ந்து 33 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
33 pasangers injured for bus accident in madhya pradhesh