மீண்டும் ஒரு சுஜித்.. ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன்.. ஏற்பட்ட துயர சம்பவம்.!!
3 years old boy fell into borewell
தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், போச்சனபள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் தோண்டப்பட்ட 3 ஆழ்துளை கிணறுகள் மூடும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சாய் என்கின்ற மூன்று வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக 120 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். குழந்தை 25 அடியில் இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், முதற்கட்ட முயற்சியின் போது மண்சரிவு ஏற்பட்டு குழந்தையை கீழே இறங்கியதாக கூறப்பட்டது.
மேலும் குழந்தை சுவாசிப்பதற்கு ஏற்ப ஆக்சிஜன் குழாய் அனுப்பப்பட்ட நிலையில், பக்கவாட்டுப் பகுதியில் பள்ளம் தோண்டி மீட்கும் முயற்சி நடைபெற்றது. 3 வயது சிறுவன் சாய் வரதன் 12 நேரம் போராட்டத்திற்கு பிறகு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சடலமாக மீட்டனர்..
English Summary
3 years old boy fell into borewell