டெல்லி || தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 தொழிலாளிகள்.. ரயில் மோதி உயிரிழப்பு.!
3 workers killed in train collision in Delhi
டெல்லியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி 3 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
டெல்லி சிராஷ்பூர் ராணா பூங்கா பகுதியை சேர்ந்தவர்கள் முகம்மது ஹபீஸ், முகம்மது, ரியாஸ் மற்றும் இசான். இவர்கள் 4 பேரும் பத்லி என்ற தொழிற்பேட்டையில் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் 4 பேரும் அருகிலுள்ள பூங்காவுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, பத்லி யார்டு - ஹலாம்பி என்ற பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தை, இவர்கள் கடக்க முயன்றுள்ளனர்.
அப்பொழுது எதிரெதிர் திசையில் இரண்டு ரயில்கள் வந்து கொண்டிருந்ததால், இசான் மட்டும் இரண்டு தண்டவாளங்களுக்கு இடையே உட்கார்ந்து கொண்டுள்ளார். ஆனால் மற்ற 3 பேரும் தண்டவாளத்தை கடக்க முயன்றதால், ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
3 workers killed in train collision in Delhi