ராஜஸ்தான் : அடர்ந்த பனிமூட்டத்தால் கார் கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி, 4 பேர் காயம் - Seithipunal
Seithipunal


ராஜஸ்தானில் அடர்ந்த பணிமூட்டம் காரணமாக கார் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவில் இருந்து நாகூரில் நடந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது சிகார் மாவட்டம் நெச்வா என்ற பகுதி அருகே கார் சென்றபோது அடர்ந்த பனிமூட்டம் காரணமாக திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவன் உள்பட 3 பேர் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் மர்ஜினா (30), தாஹிரா (45) மற்றும் அர்மான் (2) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 killed 4 injured in car overturns in rajasthan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->