தெலுங்கானா : ஆட்டோ மீது கிரானைட் கற்கள் விழுந்ததில் 3 பேர் பலி.! 5 பேர் காயம்
3 Dead After Granite Stones Fall Off Lorry Onto Auto In Telangana
தெலுங்கானாவில் ஆட்டோ மீது கிரானைட் கற்கள் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் டோர்னக்கல் மண்டலம் முகோரிகுடம் கிராமத்தில் இருந்து புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக குரவி கிராமம் நோக்கி ஆட்டோவில் 8 பேர் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது மஹபூபாபாத் மாவட்டத்தின் வாரங்கல்-கம்மம் நெடுஞ்சாலையில் குரவி காவல் நிலையம் அருகே ஆட்டோ சென்றபோது, பெரிய கிரானைட் கற்களை ஏற்றிச் சென்ற லாரி ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றது. அப்பொழுது ஆட்டோ சாலையை விட்டு விலகி சென்றததில் லாரியின் கிரானைட் கற்கள் ஆட்டோ மீது விழுந்தது.
இதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும் ஐந்து பேர் காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மஹபூபாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இறந்தவர்கள் ஆட்டோ ஓட்டுநர் பானோத்து சுமன் (35), ஒய் ஸ்ரீகாந்த் (30), டி. நவீன் (30) என அடையாளம் காணப்பட்டனர். மேலும் இதுகுறித்து குரவி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
3 Dead After Granite Stones Fall Off Lorry Onto Auto In Telangana