#JUSTIN || கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,380 பேருக்கு கொரோனா உறுதி.!
2380 fresh cases in India active cases drop to 27212
இந்தியாவில் பத்தாயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வருகிறது. இதில் நேற்று 2 ஆயிரத்து 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பம் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியா முழுவதும் ஒரே நாளில் 15 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 30,041-ல் இருந்து 27,212 ஆகக் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பம் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி அளவிலான கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
2380 fresh cases in India active cases drop to 27212