சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இயக்குனர் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இயக்குனர் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!

சென்னையில் உள்ள மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் குறும்பட இயக்குநர் சத்தியபிரகாஷ். இவர் பள்ளி மாணவி ஒருவரிடம் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பழகி வந்துள்ளார். 

நாளடைவில், சத்யபிரகாஷ், அந்த சிறுமியிடம் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைகாட்டியும், நடிப்பு பயிற்சி அளிப்பதாக கூறியும், வீட்டுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில், சத்யபிரகாஷ் கடந்த 2021-ம் ஆண்டு போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். 

இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. 
விசாரணையின் முடிவில், குற்றம்சாட்டப்பட்ட சத்தியபிரகாஷுக்கு இருபது ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். 

இதில், ரூ.55 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்க உத்தரவிட்டுள்ள நீதிபதி, உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு தமிழக அரசும் இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 years prison to cinema director for harassment


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->