மளிகை கடைக்காரருக்கு ஆசைக் காட்டி பணம் பறிப்பு - கல்லூரி மாணவிக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். மளிகைக்கடை நடத்தி வரும் இவரிடம்  கடந்த 12-ம் தேதியன்று இளம்பெண் ஒருவர் தன் பெயர் வனிதா என்றும், புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு பெற்றோர்கள் இல்லாததால் வில்லியனூர் கணவாபேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாகவும்,  உறவினர்களுக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு இருப்பதால் வீடு வாடகைக்கு வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

இதைக்கேட்ட கருணாகரன் இரண்டு நாட்களுக்கு பிறகு தன்னை வந்து பார்க்கும்படி தெரிவித்துள்ளார். உடனே வனிதா அவரது செல்போன் எண்ணை பெற்று தொடர்ந்து கருணாகரனுடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் வனிதா அவரை வெளியில் சந்தித்தும் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் வனிதா, இரவு நேரத்தில் கருணாகரனை தனியாக அழைத்துள்ளார். இவரும், தனது இருசக்கர வாகனத்தில் வனிதாவை கூட்டிக்கொண்டு வில்லியனூர் கணூவாப்பேட்டை பகுதியில்  உள்ள காட்டுப்பகுதி ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அங்கு வனிதா கருகரனிடம் ஆடைகளை கழற்றுமாறு கூறிய நிலையில், அதனை அங்கே மறைந்திருந்த கும்பல் ஒன்று, வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததுடன் அவரை பிடித்து வைத்து, ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், அப்படி பணம் தரவில்லை என்றால் வீடியோவை வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்துபோன கருணாகரன், தான் கொண்டு வந்த ரூ.50 ஆயிரம் பணத்தை அவர்களிடம் கொடுத்ததோடு, தனது நண்பரிடம் அலைபேசியில் பேசி ரூ.75 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலமாக அனுப்பியுள்ளார். அதன் பின்னரே அவர்கள் கருணாகரனை விட்டுள்ளனர். அங்கிருந்து தப்பித்து வந்த கருணாகரன், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் அனுப்பிய ஜி-பே எண்ணை தடயமாக வைத்து விசாரணை மேற்கொண்டபோது கருணாகரனிடம் பணப்பறிப்பில் ஈடுப்பட்டவர்கள் கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த பப்லு என்கிற பிரகாஷ் மற்றும் ராமு என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

பின்னர் அவர்களை சிறையில் அடைத்த போலீஸார், தலைமறைவாக உள்ள கல்லூரி மாணவி வனிதா மற்றும் அவரது கூட்டாளி அருண் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 youths arrested for money fraud in pthuchery villiyanur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->