#பஞ்சாப் || சர்வதேச எல்லையில் 2 பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எஃப் படை...! - Seithipunal
Seithipunal


பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையை கடந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 2 பாகிஸ்தன் ஆளில்லா விமானங்களை பிஎஸ்எஃப் படையினர் சுட்டு வீழ்த்தினர். 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள உதர் தரிவால் பகுதியில் உள்ள சர்வதேச எல்லையில் வழக்கம் போல் நேற்று இரவு எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இந்திய எல்லைக்குள் அத்துமீறில் நுழைந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை விமானத்தை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து, இரவு 9:30 மணியளவில் ரத்தன் குர்த் பகுதியில் அத்துமீறி நுழைந்த மற்றொரு பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து இரண்டு ஆளில்லா விமானத்தையும் எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

 இதில் இரண்டாவது ட்ரோனில் 2.6 கிலோ ஹெரோயின் அடங்கிய இரண்டு பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 Pakistan drones shot down by BSF along international border Punjab


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->