உத்திரபிரதேசம் || லாரி மோதிய விபத்தில் 2 சிறுமிகள் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தில் லாரி மோதிய விபத்தில் 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் தசரா திருவிழாவிற்கு கோட்வாலி சந்திப்பில் ஏராளமான பக்தர்கள் நேற்று திரண்டிருந்தனர். அப்பொழுது மொஹல்லா கருல்பர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி கோட்வாலி சந்திப்பு அருகே வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து திரிஷா யாதவ்(3), சாக்‌ஷி(13) என்ற சிறுமிகள் மீது மோதியது. 

இதில் பலத்த காயமடைந்த இரண்டு சிறுமிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் மற்றொரு சிறுமி காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மாவட்டம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், லாரி ஓட்டுநரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். இந்த விபத்தினால் சுமார் 12 மோட்டார் சைக்கிள் சேதமடைந்ததாகவும், சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தினால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய எஸ்.பி சங்கல்ப் சர்மா, சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 minor girls killed in lorry collision in uttarpradesh


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->