கேரளாவில் பேருந்து விபத்து - தமிழகத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 15 பேர் காயம்
15 ayyappa devotees injured in bus accident in kerala
கேரளா கோட்டயத்தில் பேருந்து விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 15 அய்யப்ப பக்தர்கள் காயமடைந்துள்ளனர்.
வேலூரில் இருந்து அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது கோட்டையம் மானத்தூரில் அதிகாலை 1.30 மணியளவில் திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ராமாபுரம் போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்களில் 5 பேர் ஆபத்தான நிலையில் கோட்டயம் மருத்துவக் கல்லூரியிலும், மற்றவர்கள் பாலா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் பேருந்து ஓட்டுனர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
15 ayyappa devotees injured in bus accident in kerala