ஏப்ரல் 14 க்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா.?
144 in india
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,789 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4,421 லிருந்து 4,789 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா எதிரொலியாக ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்பு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நிபுணர்களும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது என கூறப்படுகிறது.