‘நேருக்குநேர்’ மோதிய கார்கள்! தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் உட்பட 13 பேர் பலி!! - Seithipunal
Seithipunal


ர்நாடகா மாநிலத்தில் இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் 10 பேர் உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர்.

ஓசூரை சேர்ந்த 10 பேர் தர்மஸ்தலா கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது கோவிலுக்கு சென்றுவிட்டு தரிசனம் முடிந்து இன்று அதிகாலை நேரத்தில் வீடு திரும்பியுள்ளனர். இதனை தொடர்ந்து, குனிக்கல் என்னும் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரே வந்த மற்றொரு காரின் மீது நேருக்குநேராக மோதியுள்ளது.

இதில் காரில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 10 பக்தர்கள் உட்பட 13 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது. சாமி தரிசனம் முடிந்து வீடு திரும்பும்போது சாலை விபத்தில் பக்தர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 members death on car accident in Karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->