பெரும் பரபரப்பு.. "முதல்வருக்கு கொலை மிரட்டல்"..! 11ம் வகுப்பு மாணவன் அதிரடி கைது..!! - Seithipunal
Seithipunal


தனியார் ஊடகத்திற்கு வந்த கொலை மிரட்டல் இமெயில்..!!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்நிநாத் ஆகியோரை கொலை செய்வேன் என பள்ளி மாணவன் மின்னஞ்சல் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணையில் இறங்கிய உத்திரபிரதேச மாநில போலீசார் லக்னோவில் 16 வயது மாணவனை நொய்டா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள நொய்டா உதவி காவல் ஆணையர் ரஜ்னீஷ் ஷர்மா செக்டர் 20 காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி கொலை மிரட்டல் வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து நடத்தப்பட்ட விசாரணையில் குற்றவாளி லக்னோவில் சின்ஹாட் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சின்ஹாட் பகுதிக்கு விரைந்த போலீசார் 11ம் வகுப்பு முடித்த பள்ளி மாணவனை கைது செய்துள்ளனர். பள்ளி மாணவன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153ஏ, 505பி ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இதேபோன்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு செல்போன் மூலம் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நடை கடைக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11th class student arrested for threatening to kill UP CM


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->