சத்தீஸ்கர் : டிரக் மீது வேன் மோதி கோர விபத்து - 11 பேர் பலி, 12 பேர் காயம் - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் டிரக் மீது வேன் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

சத்தீஸ்கரின் பலோடாபஜார்-பட்டாபரா மாவட்டத்தில் உள்ள கமாரியா கிராமத்திற்கு அருகே (வியாழக்கிழமை) நேற்று இரவு டிரக் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நான்கு குழந்தைகளும் அடங்குவர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்து போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிம்கா பகுதியில் உள்ள கிலோரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அர்ஜூனி பகுதியில் நடைபெற்ற ஒரு குடும்ப விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 killed 12 injured in van truck collision in Chhattisgarh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->