சர்க்கரை நோயாளிகளுக்கு வரம்.. இதை உணவில் சேர்த்தால் பலன் நிச்சயம்.!  - Seithipunal
Seithipunal


சர்க்கரை நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை பெருமளவில் பயன் கொடுக்கக் கூடியது என்று விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. இந்த லவங்கப்பட்டையில் ஆற்றல் பயன்பாடு, வளர்ச்சிதை மாற்றம் மற்றும் இன்சுலின் ஹார்மோன்கள் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தக்கூடிய திறன் இருக்கிறது. 

லவங்கப்பட்டையை எடுத்துக் கொள்வதால் உடலில் இன்சுலின் அதிகரித்து சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதய நோய்களின் அபாயத்தை குறைக்க லவங்க பட்டை உதவும் என்று கூறப்படுகிறது. 

ஒரு நாளைக்கு 1.5 கிராம் லவங்கப்பட்டை எடுத்துக் கொள்வதால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளின் அளவு குறைந்து, இதய நோய்க்கான ஆபத்துகளை குறைக்க உதவும். சில வகை வைரஸ்க்களிடம் இருந்து நம் உடலை காப்பாற்ற லவங்கப்பட்டை உதவும்.

குறிப்பாக டெங்கு கொசுக்களால் பரவும் வைரஸ் மற்றும் இம்ப்ளியன்சா உள்ளிட்ட நோய் தொற்றுகளின் ஆபத்தை குறைப்பதில் இலவங்கப்பட்டை முதன்மை பெற்றுள்ளது. 

நிறைய வைரஸ் தொற்றுகளின் அபாயத்தை லவங்கப்பட்டை கட்டுப்படுத்தும் .எனவே அன்றாடம் நாம் 1.5 கிராம் அளவிற்கு இலவங்கப்பட்டையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

solution for diabatic using lavanga pattai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->