அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினால் இப்படியெல்லாம் நடக்குமா.?! வியக்கவைக்கும் தகவல்.!
non veg stop from food
அசைவம் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவது இறைச்சி தான். அப்படிப்பட்ட உணவை சாப்பிடாமல் இருந்தால் நமக்கு என்னென்ன மாற்றங்கள் உடலில் உண்டாகும் என்பதை இப்போது காணலாம்.
இறைச்சி சாப்பிடும் பொழுது உடல் சூடு அதிகமாக காணப்படும். இதனால், சூட்டுக் கொப்புளங்கள் உள்ளிட்டவை ஏற்படும். அவற்றை இறைச்சி சாப்பிடாமல் இருக்கும்போது தடுக்க முடியும். அத்துடன் இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால் உடல் எடை குறைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். எனவே, அதை நிறுத்தும் பொழுது நமது கல்லீரல் பாதுகாக்கப்படும்.
இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால் மூன்றிலிருந்து நான்கு கிலோ வரை உடல் எடை குறையும். அத்துடன் இதயநோய்கள் ஏற்படுவதை 24% தடுக்கமுடியும்.
ஆட்டு இறைச்சியில் கொழுப்புகள் அதிகமாக இருக்கிறது. எனவே, இதை தவிர்க்கும் பட்சத்தில் உடலில் கொழுப்பின் அளவு குறையும் இறைச்சியை மிகவும் கடினமான உணவு என்பதால் செரிமான கோளாறுகள் ஏற்படும். எனவே இறைச்சியை தவிர்த்தால் செரிமான கோளாறுகள் சீராகும்.
புரதச்சத்து மிகவும் எளிமையான வழி என்றால் இறைச்சி சாப்பிடுவது தான். இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால் நமது உடலில் புரதச்சத்து குறைபாடு ஏற்படக்கூடும். எனவே, சைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிகப்படியான புரதச் சத்துக்கள் அடங்கிய உணவுகளை எடுத்துக் கொண்டு ஈடுகட்ட முடியும்.