டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வு நாள் அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 , குரூப் 2a தேர்வுகளுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், 

"தற்பொழுது குரூப்-2 மற்றும் குரூப்-2a ஆகிய தேர்வுகள் திட்டமிட்டபடி இந்த மாதம் இந்த அறிவிப்புகள் வெளியிடுவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், மார்ச் 23ஆம் தேதி அன்று விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஆகும். 

இந்தப் போட்டித் தேர்வுகள் மே மாதம் 21 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகின்றன.

ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த தேர்வுகளை இரண்டு வகைகளாக எழுதலாம்.

தமிழில் எழுத விருப்பமுள்ளவர்கள் 
தமிழில் 100 கேள்விகளும்,
பொது அறிவியல் 75 கேள்விகளும் 
ஆப்டிடியூட் டெஸ்ட் 25 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 

ஆங்கிலத்தில் எழுத விரும்புபவர்களுக்கு 
பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகளும் 
பொது அறிவியல் 75 கேள்விகள் 
ஆப்டிடியூட் டெஸ்ட் 25 கேள்விகளும் கேட்கப்படும்.

இந்தக் கேள்விகளுக்கான மொத்த மதிப்பெண் 300 ஆகும். இந்த 300 மதிப்பெண்ணில் 90 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்றவர்கள் தோல்வி அடைந்தவர்கள் என்று அறிவிக்கப்படும். மொத்தம் 5,417 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது." என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC Group 2 Exam 2022


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->