தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம்.? பள்ளிக்கல்வித் துறை ஆணையர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதனிடையே 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதேபோல ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. 

கடந்த ஐந்தாம் தேதி முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டது. கோடை வெயிலின் தாக்கத்தால் தேர்வுகள் மட்டும் எழுதிய மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும், மற்ற நாட்களில் பல தேவையில்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் தேர்வுகள் முடிவடைவதால், கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூலை 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை இன்று முதல் ஜூலை 12ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட இருந்த நிலையில், பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. பள்ளி திறப்பு தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School Opening date change for tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->