அயோத்தி தீர்ப்பு.. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை! முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!
school leave for krishnagiri
நாடே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணி மணி அளவில் தீர்ப்பு உச்சநீதிமன்றம் வழங்குகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான நீண்ட காலமாக நடைபெற்று வரும் வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்து இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு காலை பத்தரை மணிக்கு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என முன்கூட்டியே நாடு முழுவதும் ஏற்கனவே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 10 ஆம் தேதி முதல் 14ம் தேதிக்குள் இறுதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
English Summary
school leave for krishnagiri