குரூப் 2 தேர்விலும் முறைகேடு.! சர்ச்சைக்குள்ளாகும் கீழக்கரை தேர்வு மையம்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில், அரசு பணிகளில் சேர, தமிழக அரசு பணியாளா தோவாணையம்(டிஎன்பிஎஸ்சி) சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குரூப் 4 ஆகிய இடங்களுக்கான தேர்வை ஒன்றிணைத்து தேர்வுகள் நடத்தப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப் 4 பிரிவில் காலியாக இருந்த 9,398 பணியிடங்களுக்கு பல இலட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.

இதனைத்தொடர்ந்து தேர்வு முடிவுகள் நவம்பர் 12 ஆம் தேதி டிஎன்.பிஎஸ்.சி இணைதளத்தில் வெளியிடப்பட்டன. 

இந்தநிலையில், சமீபத்தில் வெளியான குரூப்-4 தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து தேர்வர்கள் எழுப்பியுள்ள கேள்விகள், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் 40 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்தது எப்படி? அதுமட்டுமில்லாமல் அதே மையத்தில் தேர்வு எழுதிய 5 நபர்கள் தமிழக அளவில் குரூப்-4 தேர்வில் எப்படி என்ற குற்றச்சாட்டையும் தேர்வர்கள் முன்வைத்தனர்.

வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ராமநாதபுரத்தில் குறிப்பிட்ட தேர்வு மையத்தை தேர்வு செய்தது ஏன்? என நடைபெற்று முடிந்த குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக என விசாரிக்க வேண்டும் என கோரிக்கை தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இதற்கிடையே, குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க ராமநாதபுரம் ஆட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார். 

இந்தநிலையில், ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் 2017-18 ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வு எழுதியவர்கள் மட்டும் அதிக மதிப்பெண் பெற்றது எப்படி என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அந்த மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 50 பேர், மாநில அளவில் 50 இடங்களுக்குள் வந்துள்ளது தெரிய வந்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may be forgery in group 2 also


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->