பிஇஎல் நிறுவனத்தில் டிப்ளமோ பொறியாளருக்கு வேலை.. விண்ணப்பித்து விட்டீர்களா?! - Seithipunal
Seithipunal


மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில், காலியாக உள்ள இன்ஜினியரிங் உதவியாளர் டிரெய்னி பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இன்ஜினியரிங் உதவியாளர் டிரெய்னி பணியில் 13 காலி இடங்கள் உள்ளன‌. இதற்கு மாத சம்பளம் ரூ.24,500 முதல் 90,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிப்போர் டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முதல் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். மேலும், பயிற்சின்போது மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும். இதன் பின்னர் நிரந்தர பணி வழங்கப்படும்.

இதற்கு விண்ணப்பிப்போர் www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பக் கட்டணம் ரூ.250 செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்துவதில், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு  விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in BEL Company


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->