9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் 'ஆல் பாஸ்'.. அமைச்சர் அறிவிப்பு.!!
9th and 11th students all pass
இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு சில வகுப்புகளுக்கு தேர்வு நடத்தாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதன்பிறகு கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து நவம்பர் மாதம் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. ஆனால் மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவுவதைத் தடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.
மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே மகாராஷ்டிராவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட், இந்த ஆண்டு 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்தாமல் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் கூறியபோது, மகாராஷ்ட்ராவில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவுவதால், 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த கடினமான சூழ்நிலை நிலவுகிறது. எனவே 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளோம். இந்த முடிவை நீண்ட ஆலோசனைக்குப் பிறகு மாணவர் நலன் கருதி எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
English Summary
9th and 11th students all pass