உலகில் உயரமான முருகனை தரிசித்த நடிகர் யோகிபாபு.! உடனிருந்த கணேஷ்.!  - Seithipunal
Seithipunal


சேலம் பகுதியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அருகே புத்திர கவுண்டன் பாளையத்திலுள்ள முத்து மலையில் முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இங்கே மிகப்பெரிய முருகன் சிலை (146 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலிருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வ வருவார்கள். மேலும் திரைப்பட பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என அனைவரும் இங்கே சுவாமி தரிசனம் செய்ய வருவதுண்டு.

இந்த நிலையில் சமீபத்தில் திரைப்படத்துறையில் காமெடி நடிகராகவுள்ள யோகி பாபு அருள்மிகு முருகன் கோவிலுக்கு சஷ்டி தினங்களில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.

கோயில் நிர்வாகத்தின் சார்பில் யோகி பாபுவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மற்றொரு காமெடி நடிகரான கணேஷும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yokibabu goes To puthiragoundanpalayam murugan temple


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->