ஊரடங்கு உத்தரவு: பொதுமக்களுக்கு யோகி பாபு கூறிய அறிவுரை! குவியும் பாராட்டுக்கள்!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் தற்போது கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்திய நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கிறார்கள். 

இந்த நிலையில் கட்டுப்பாட்டை மீறி வீட்டை விட்டு வெளியே வருபவர்களை காவல்துறையினர் கண்டித்த திருப்பி அனுப்புவதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் ஆண் போலீசார் மட்டுமில்லாமல் பெண் போலீசார்களும் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான யோகி பாபு அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில், "உங்கள் வீட்டில் அருகில் போலீஸ் காவலர்கள் யாரேனும் கண்காணிப்பு பணியில் இருந்தால் குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்து உதவுங்கள். மேலும் பெண் காவலர்கள் இருந்தால் அவர்களே உங்கள் வீட்டின் கழிப்பறையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லுங்கள் அதுவே அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்" என்று அதில் குறிப்பிட்டிருந்தார். 

மக்களுக்காக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு பொதுமக்கள் உதவி செய்ய வேண்டும் என்ற ஒரு நல்ல அறிவுரை காமெடி நடிகர் யோகிபாபு அளித்ததால் அவருக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yogibabu post on Twitter 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->