திருப்பதி கோவிலில் திருமணம் நடைபெறாதது இதனால்தானா.?! பரபரப்பு காரணங்கள்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் வட்டாரத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

இவருக்கும், இயக்குனரான விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியான திருமண அழைப்பிதழில் மகாபலிபுரம் என்று போடப்பட்டுள்ளது.இந்நிலையில் திருப்பதி கோவிலில் திருமணம் நடைபெற தேவஸ்தானம் எதற்காக மறுப்பு தெரிவித்தது? என்பது குறித்த காரணங்கள் வெளியாகியுள்ளன. நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருடைய குடும்பத்தினரும் மொத்தமாக 150 பேர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதி கேட்டுள்ளனர்.

நட்சத்திரங்களின் திருமணம் என்ற காரணத்தால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் திருப்பதியில் ஏற்கனவே பக்தர்களின் வரவு அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு கேள்விக்குறி என்பதால் இந்த திருமணத்துக்கு திருப்பதி கோவிலில் அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why Tripathi ignore Nayanthara marriage?


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->